பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை!

1 Min Read

தஞ்சாவூர், ஜன.13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில்  உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 08.01.2026 அன்று நடைபெற்ற “MECH STORM – 2K26” (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கட்டுரை வாசித்தல் (Paper Presentation) என்ற போட்டியில் “Integration of AI & IoTs in Predictive Maintenance  of Mechanical Systems” என்ற தலைப்பில் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் செல்வன் எஸ்.டி.ஹரிஹரன், முதல் பரிசையும் மற்றும் CAD Modeling என்ற போட்டியில் மூன்றாவது பரிசையும் பெற்றுள்ளார்.

பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப்பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த எஸ்.டி.ஹரிஹரன் என்ற மாணவரையும் மற்றும் கலந்து கொண்ட மற்ற மாணவர்களையும் இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர்  ஜி.இராஜாராமன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டி னார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *