மூத்த மகனுக்கு அதிக சொத்து கிடைக்குமா? இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் மூத்த மகனுக்கு அத்தகைய முன்னுரிமை எதுவும் இல்லை. முதலில், பூர்வீகச் சொத்து மற்றும் சுய சம்பாத்தியச் சொத்து ஆகியவற்றில் மகன்கள் மற்றும் மகள்களுக்கு உள்ள உரிமைகள் குறித்தும், உயில் மூலம் வழங்கப்படும் சொத்து எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிப்பதாவது:
இந்தியக் குடும்பங்களில், தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த மகனே அவருடைய சொத்துகள் அனைத்தின் அல்லது பெரும்பகுதியின் உரிமையாளரா கிறார் என்று பொதுவாக நம்பப் படுகிறது.
பல சமயங்களில், இந்தத் தவறான புரிதல் குடும்பத்திற்குள் சண்டைகளுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வழிவகுக்கிறது. அதன் பிறகு, சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை செல்கிறது. இருப்பினும், இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, தந்தையின் சொத்துகள் அனைத்தும் மூத்த மகனுக்கு மட்டுமே சேர வேண்டும் என்ற பொதுவான விதி எதுவும் இல்லை.
சொத்து எவ்வாறு பிரிக்கப் படுகிறது என்பது, அது பரம்பரைச் சொத்தா அல்லது சுய-சம்பாத்தியச் சொத்தா, இறந்தவர் உயில் ஏதேனும் எழுதியுள்ளாரா, மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் மதத்தின் அடிப்படையில் எந்த வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும் ஆகிய காரணி களைச் சார்ந்துள்ளது.
குறிப்பாக, 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டமும் அதன் 2005-ஆம் ஆண்டு திருத்தங் களும் மகன்களுக்குச் சமமான உரிமைகளை வழங்கியுள்ளன. அதேபோல், மகள்களுக்கும் உரிமைகள் உள்ளன.
தந்தையின் மறைவுக்குப் பிறகு அனைத்துச் சொத்துகளும் மூத்த மகனுக்கே சென்றுவிடுமா?: இந்தியாவில், தந்தையின் மறைவுக் குப் பிறகு அவரது சொத்துகள் அனைத்தும் மூத்த மகனுக்கு மட்டுமே சேர வேண்டும் என்று எந்தவொரு மதத்திலும் நேரடியான சட்ட விதிமுறை எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது ஒரு சட்ட விதி அல்ல; மாறாக, இது முக்கியமாக ஒரு சமூகக் கண்ணோட்டமே ஆகும்.
இந்தியாவில் சொத்துரிமை தற்போது ஓர் அடிப்படை உரிமை யாக இல்லை; இருப்பினும், அரசியலமைப்பின் 300A பிரிவின் கீழ் இது ஒரு முக்கியமான உரிமை யாகவும் மனித உரிமையாகவும் விளங்குகிறது. சட்டத்தின் அதிகாரமின்றி எவரும் தங்கள் சொத்தை இழக்க நேரிடாது என்பதை இது உறுதி செய்கிறது.
1978-ஆம் ஆண்டின் 44ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம், இது அடிப்படை உரிமைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு சட்டப்பூர்வ உரிமையாக மாற்றப்பட்டது. இந்து வாரி சுரிமைச் சட்டத்தின்படி, பெற்றோரின் சொத்தில் பிள்ளை களுக்கு (ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு) சமமான உரிமைகள் உள்ளன. முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, பொதுப் பயன்பாட்டிற்காக மட்டுமே அரசாங்கத்தால் தனியார் சொத்தை கையகப்படுத்த முடியும்.
