சென்னை, ஆக.6- நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் போராட்டம் நடந்த நேரத்தில் த.வெ.க. அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அதற்கு பதில் தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்போது நிதி அமைச்சர் அதுதொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு நீட் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவை எதிர்காலத் தலைமுறையினரின் உயர்கல்வி வாய்ப்பினை பெரிதும் பாதிக்கின்றன. எனவே நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து முந்தைய முறையான பிளஸ்-2 பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க் கையை தொடர்ந்து ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘நீட்’ தேவையில்லை: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு நிதி அமைச்சர் வலியுறுத்தல்
Leave a Comment
