பொது இடங்களில் புகைபிடித்தால் சிறைத் தண்டனை? தமிழ்நாடு அரசு தீவிர பரிசீலனை!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 6- தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக சிறை தண்டனை விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, பொது இடங்களில் புகைபிடிக்கும் நபர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த அபராத நடவடிக்கை பொது இடங்களில் புகைபிடிப்போரைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை எனத் தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும், இந்த விதியை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும் தற்போதைய தண்டனையை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அபராதத்திற்குப் பதிலாக அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *