வினாத்தாள் கசிவு வழக்கு: நீதிபதி திடீர் இடமாற்றம்! விசாரணை நியாயமாக நடக்குமா? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் சர்ச்சையும் சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது, மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நீதிபதி மாற்றம்: வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அனு குரோவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அஜய் குப்தா என்ற புதிய நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் ஆஜரான சிபிஅய் வழக்குரைஞரும் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நீதிபதியும் மாற்றப் பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பி யுள்ளது.

விசாரணையை
முடக்க திட்டமா?

விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விரைவான விசார ணையை முடக்குவதற்கும், வழக்கை திசை திருப்புவதற்கும் பயன் படுத்தப்படும் பழைய உத்தியே இந்த திடீர் இடமாற்றம் என சமூக ஆர்வலர்களும் விமர் சகர்களும் குற்றம் சாட்டு கின்றனர்.

“வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” எனப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக் குறுதிகள் அனைத்தும் வெறும் போலி வாக்குறுதி களாகவே தோன்றுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித் துள்ளன. அரசின் உள் நோக்கம் முற்றிலும் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.

அடுத்தடுத்து நடக்கும் இந்த அடையாளம் தெரியாத சம்பவங்கள், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர் புடைய வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்குமா என்ற பெரும் கேள்விக் குறியை உருவாக்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *