குமரி, ஜூலை 30– கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகத் தலைவர் எஸ்.குமாரதாஸ் (வயது 67) மறைவுற்றார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி 28.7.2026 அன்று கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் அவரது உடலுக்கு கழகக் கொடியை போர்த்தியும், மாலை வைத்தும் வீர வணக்கத்தை செலுத்தினர்.
குமாரதாசின் வாழ்விணையர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், மாவட்ட கழகக் காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ராஜசேகர், மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதானு, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர்
இரா.இராஜேஷ் தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்சு, கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, மாவட்ட மகளிர் அணி தலைவர் சு.இந்திரா மணி, கழகத் தோழர்கள் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி நகர் மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்தனர். தோழர் குமாரதாஸ் அவர்களுடைய இறுதி நிகழ்ச்சி எந்தவித சடங்குகளும் இல்லாமல் உடல் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
நாகர்கோவில் புளியங்குடியில் உள்ள மின் மயானத்தில் எந்த விதமான சடங்குகளும் இல்லாமல் எரியூட்டப்பட்டது. அங்கு கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராஜன், நாகர்கோவில் மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட துணை தலைவர் ச.நல்லபெருமாள், கழகத் தோழர்கள் பா.சு முத்து, வைரவன், மு.குமரிச் செல்வன் மற்றும் எஸ்.குமாரதாஸ் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்று வீர வணக்கத்தினை செலுத்தினர்.
