பிரதமர் திறந்து வைத்த 7 நாட்களில்… கூரை உடைந்து மழைநீரில் மூழ்கிய ஜெய்சல்மேர் ரயில் நிலையம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஜெய்சல்மேர், ஜூலை 28- கடந்த வாரம் அரியானா மாநிலத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதே நிகழ்வில், காணொலி வாயிலாக ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தின்’ கீழ் புதுப் பிக்கப்பட்ட சென்னை பூங்கா நகர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள 12 ரயில் நிலையங்களையும் அவர் நாட்டிற்கு அர்ப் பணித்தார்.

பிரதமரால் திறக்கப்பட்ட இந்த 12 நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையங்களில், ராஜஸ்தான் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய்சல்மேர் ரயில் நிலையமும் ஒன்றாகும்.

ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாகத் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் தாக்கம் தாங்காமல் ரயில் நிலையத்தின் கூரைகள் உடைந்தும், சில இடங்களில் பலத்த கசிவு ஏற்பட்டும் சேதமடைந்தன.

இதன் காரணமாக, பயணிகள் தங்கும் அறைகள், காத்திருப்போர் கூடம் மற்றும் பல்வேறு முக்கிய கட்டடப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.

நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரயில் நிலையம், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மழைநீரில் மூழ்கிய சம்பவம் அங்கு வந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *