திருச்சி, ஜூலை 28- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கோவை யுனைடெட் மருந்தியல் கல்லூரி இணைந்து மருந்தியல் கல்லூரிகளுக்கிடையிலான அய்ந்தாவது மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியினை நடத்தியது.
இதில் 22.07.2026 முதல் 23.07.2026 வரை நடைபெற்ற போட்டிகளில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இரண்டாமாண்டு மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவி சி.கனகவள்ளி 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடத்தினையும் இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவிகள் வி.பிரியங்கா மற்றும் எஸ்.மதுமதி ஆகியோர் வளையப் பந்து (Tennikoit) போட்டியில் மூன்றாமிடத்தினையும் பெற்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தா மரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள 55 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டதில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் பரிசு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
