புதுடில்லி, ஜூலை 27– நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்ட பேரணியின் போது, ஒன்றிய தீவிர அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர் பெல்லட் துப்பாக்கியால் குறைந்த பட்சம் 7 முறை சுட்டுள்ளார் என்றும், அதில் 5 குண்டுகள் நேரடியாகப் போராட்டக்காரர்கள் மீது பாய்ந்துள்ளன என்றும் சி.ஆர்.பி.எப். நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுடப்பட்ட 7 சுற்று களில் 5 குண்டுகள் போராட்டக்காரர்களைத் தாக்கியதாகவும், 2 குண்டுகள் தரையில் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையின் போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத் தப்பட்டதா என்பது குறித்து சி.ஆர்.பி.எப். முன்னதாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகப் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 25 வயதான இர்ஷாத் ஷேக் என்ற நபரும் அடங்குவார்.
இதில் ஒருவர் ஆங்கில இதழுக்காக செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளரும் அடங்குவார்.
அமைதியாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் “இனிமேல் யாரும் போராடவந்தால் உயிரோடு திரும்ப மாட்டீர்கள்” என்ற மிரட்டலே ஆகும். ஜாலியன்வாலாபாக் துப்பாக்கிச்சூட்டிலும் இதே பாணியில் தான் ஜெனரல் டயர் செயல்பட்டார்.
