இந்தியாவில் மாணவர்கள் மீதான தாக்குதல் அய்க்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அய்க்கிய நாடுகள் சபை (UN) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து அய்.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியான முறையில் போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கைது மற்றும் துன்புறுத்தல் அச்சமின்றி அவர்கள் தங்கள் குரலை எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அய்.நா செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கை, இந்தியாவின் ஜனநாயக மதிப்புகள் மற்றும் அடிப்படை உரிமைகளின் தற்போதைய நிலை குறித்து பன்னாட்டு சமூகத்தில் எழுந்துள்ள கவலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அய்.நா-வின் இந்தக் கண்டனத் தைத் தொடர்ந்து, ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள், “ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கால் பன்னாட்டு அளவில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *