நீட் ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்! அமைச்சர் வன்னி அரசு அதிரடி பேச்சு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ரிஷிவந்தியம், ஜூலை 26- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதாது; ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டிற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணா புரம் அருகே உள்ள அத்தியூரில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வன்னி அரசு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

பேட்டியின் விவரம் வருமாறு: “நீட் தேர்வு முறை என்பதே ஒரு மிகப்பெரிய ஊழல் ஆகும். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதைத் தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட ஒரு சனாதன யுக்திதான் இந்த நீட் தேர்வு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே நீட் தேர்வை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

“கருநாடகா அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க மறுத்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் சூழல் மிகவும் மோசமாக இருக்கும் இந்த நேரத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து வருகின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் கருநாடகாவுக்குச் செல்வது முற்றிலும் தேவையற்றது” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *