சமயபுரம், ஜூலை 26 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மணியமாகப் பணியாற்றிவரும் பழனி என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், பொது மற்றும் நிர்வாக நலன் கருதி தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், இந்தப் பணி இடைநீக்க நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வின்போது நிர்வாக ஒழுங்கின்மை கண்டுபிடிக்கப்பட்டதால், கோயிலில் இளநிலை உதவியாளர் அரிகோவிந்த் என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாகப் புகார் சமயபுரம் மாரியம்மன் கோவில் மணியம் பணி இடைநீக்கம்..!
Leave a Comment
