* இந்த டெங்கு தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.
* 0.5 மி.லி வீதம் 2 டோஸ்களாக வழங் கப்படுகிறது. முதல் டோஸ் செலுத் திய 3 மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.
* இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த டெங்கு தடுப்பூசிகளைப் போல, குருதிப் பரிசோதனை செய்து ‘முன்பு டெங்கு வந்திருக்கிறதா’ என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. டெங்கு காய்ச்சல் முன்பு வந்தவர்களுக்கும், வராதவர்களுக்கும் இதை பாதுகாப்பாகச் செலுத்தலாம்.
* டெங்குவை உருவாக்கும் 4 வகையான வைரஸ்களுக்கு எதிராகவும் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) இது பாதுகாப்பு அளிக்கிறது.
*டெங்கு காய்ச்சலால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நிலையை 84 சதவீதம் – 90 சதவீதம் வரை குறைக் கிறது.
* இந்தியாவில் தடுப்பூசி தட்டுப் பாடின்றி கிடைக்க, அய்தராபாத்தைச் சேர்ந்த ‘பயோலாஜிகல் ஈ’ (Biological E) நிறுவனத்துடன் டகேடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
* பிரான்சின் ‘சனோஃபி பாஸ்டர்’ (Sanofi Pasteur) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும்.
* 9 முதல் 16 (சில நாடுகளில் 45) வயது வரம்பிற்குட்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.
* முன்பு ஒருமுறையாவது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இத்தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
* முன்பு டெங்கு வராத ஒருவ ருக்கு இத்தடுப்பூசியைச் செலுத்தி னால், எதிர்காலத்தில் அவருக்கு முதன்முறையாக உண்மை டெங்கு தொற்றும்போது, அது தீவிரமான டெங்குவாக (Severe Dengue) மாறக்கூடிய ஆபத்து இருந்தது. இதனால் இதன் பயன்பாடு பெருமளவில் கட்டுப் படுத்தப்பட்டது.
* டெங்கு வைரஸில் 4 வகைகள் (Serotypes) உள்ளன. ஒருமுறை ஒரு வகை டெங்கு வந்தால், உடலுக்கு அந்த குறிப்பிட்ட வகைக்கு மட்டும் வாழ்நாள் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; ஆனால் மற்ற 3 வகைகளால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
* க்யூடெங்கா போன்ற வீரியம் குறைக்கப்பட்ட நேரடித் தடுப்பூசிகள் (Live-attenuated vaccines), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒரே நேரத்தில் 4 வகை வைரஸ்களுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கத் தூண்டுகின்றன.
* உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்கு பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் க்யூடெங்கா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
* தடுப்பூசி டெங்குவின் தீவிரத்தைக் குறைத்து உயிராபத்திலிருந்து காப்பாற்றி னாலும், அது கொசுக்கடிகளை முற்றிலும் தடுக்காது. எனவே நிலத்தடி நீர் தேங்குவதைத் தடுப்பது, கொசு உற்பத்தி இடங்களை அழிப்பது மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கைகள் எப்போதும் அவசியம்.
