தூத்துக்குடி, ஜூலை 11– 19.7.2026இல் ப.க.சார்பி்ல் நூல் அறிமுக விழா 30.7.2026இல் நீட் எதிர்ப்பு பேரணிக்கு வரவேற்பு முத்தையாபுரத்தில் தெருமுனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
10.7.2026அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கோ. முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் செய லாக்கவுரையாற்றினார்.

சேலம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றையும் விளக்கியும், தமிழர் தலைவரின் அயரா பணிகள் பற்றி எடுத்துரைத்தும், கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரன் உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட ப.க. செய லாளர் சொ.பொன்ராஜ், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் த.நாகராசு,
மாநகரதலைவர் த.பெரியார் தாசன், கே.கோபால்சாமி ,ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட திராவிடர்கழக இணைச் செயலாளர் – மு.பாலமுருகன்
மாநகரசெயலாளர் – த.செல்வ ராசு
மாவட்ட இளைஞரணிதலைவர் – அ.பிரகாசு ஆகியோருக்கு மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.நவீன் நன்றி கூறினார்.
