பெங்களூரு, ஜூலை 01– பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது.
இது குறித்து திருவள்ளு வர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று (30.6.2026) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம், தாய் மொழி கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கம் இணைந்து வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது.
செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் நடை பெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத் துரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
20-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் திருக்குறள் தொடர்பான தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். இ வ்வாறு அவர் தெரிவித்தார்.
