சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.243 கோடி வசூல் இந்திய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம் சென்னை, ஜூன் 29 சிறப்பு ரயில்கள் மூலம்

1 Min Read

சென்னை, ஜூன் 29 சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.243 கோடி வசூல் செய்து தெற்கு ரயில்வே இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2025-2026 ஆண்டில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், இந்தியாவிலேயே மிக அதிகமான மக்கள் தெற்கு ரயில்வேயில் தான் பயணம் செய்துள்ளனர்.  விழாக் காலம் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க தெற்கு ரயில்வே செய்த நல்ல திட்டமிடல் இந்த வெற்றிக்கு காரணம்.

கடந்த ஆண்டில் 229 சிறப்பு ரயில்கள் மூலம் மொத்தம் 2,513 முறை முன்பதிவு ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 32.98 லட்சம் மக்கள் பயணம் செய்துள்ளனர். ரயில்வே துறைக்கு ரூ.243.22 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதுதவிர, சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தில் 1,762 பொதுப்பெட்டி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இந்தச் சிறப்பு ரயில்களில் ஒரு முறைக்கு சராசரியாக 1,312 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் இந்திய ரயில்வேயின் பொதுவான கணக்குப்படி ஒரு ரயிலில் 894 பேர் மட்டுமே பயணம் செய்கிறார்கள். இதனால் இந்தியாவிலேயே மிகச் சிறந்த ரயில்வே மண்டலமாக தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, பெங்களூரு, ஆந்திரா போன்ற மக்கள் அதிகம் செல்லும் முக்கிய ஊர்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை – கன்னியாகுமரி, சென்னை – திருவனந்தபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் சாதாரண ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மக்களுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படும் போது அதுகுறித்த தகவல் கைப்பேசிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் மக்கள் உடனே சிறப்பு ரயிலில் பயணச்சீட்டு எடுத்து தங்களின் பயணத்தை எளிதாக்கிக் கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *