கொல்கத்தா, ஜூன் 29- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தரதலா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வணிகச் சேமிப்பு கிடங்கு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து தரைமட்டமானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக நேற்றும் தீவிரமாக நடைபெற்றது.
மீட்புக் குழுவினர் தொடர்ந்து எஞ்சியிருப்பவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காலேக் சர்தார் என்பவர், சிகிச்சை பலனின்றி (27.6.2026) நேற்று பரிதாப மாக உயிரிழந்தார்.
இதன் காரணமாக, இந்த கொடூர கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், காயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
