சின்னாளப்பட்டியில் பிறந்து வளர்ந்த தோழர் சு.துரைராஜ் (வயது 78), தற்போது சென்னை அயன்புரத்தில் வசித்து வருகிறார். திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றிவரக் கூடியவர். இணையர் உடல்நிலை காரணமாக வரும் ஜூன் 26 அன்று சின்னாளப்பட்டியில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவியலாத சூழலில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், அக் கூட்டத்திற்கான நன்கொடையாக ரூ.2000-த்தினை நேற்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கினார். (22.06.2026)
