கிராமம் கிராமமாகக் கொள்கை பரவ வேண்டும்
தங்களின் அறிக்கையை ‘முரசொலி’ ஏட்டில் படித்து மிகவும் மகிழ்ந்தேன்! நெகிழ்ந்தேன்!
முத்தமிழ் அறிஞர் மானமிகு சுய மரியாதைக்காரர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தாய்க் கழகம் சார்பில் 103 ஊர்களில் பிறந்த நாள் விழா பெருமிதப் பூரிப்போடு கொண்டாடப்படுகிறது என்கிற நல்அறிக்கைக் கண்டு நல்லிதயம் கொண்ட உடன் பிறப்புக்கள் மகிழ்ந்து மட்டற்ற வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமுள்ளனர்.
அதற்காக என் நன்றி கலந்த வணக் கத்தைத் தங்களுக்கு தெரியப்படுத்தி மகிழ்கின்றேன்.
சொற்பொழிவாளர்களைக் கொண்டு நம்முடைய கொள்கைகளை மீண்டும் மக்களிடையே கிராமம் கிராமமாக நேரடியாக எடுத்துச் சொல்லும் வாய்ப் பினை தி.மு.க. தலைவர் அவர்களிடம் தாங்கள் நினைவுபடுத்திட அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
– இ. முத்தையா
தி.மு.க. – தலைமைக் கழக
