நாங்கள் கட்சி மாறுகிறோம் என்று சொல்வது போக்கடாத்தனம். அந்தக் கட்சியிலிருந்து ஓட்டு வாங்கிவிட்டு இந்தக் கட்சிக்கு வருகிறவன், ஒரு கட்சியில் இருந்து பலன் அனுபவித்துவிட்டு வேறு கட்சிக்குப் போகிறவன், ஒரு கட்சியில் நின்று ஜெயித்து விட்டுப் பதவி கொடுக்கிறான் என்பதற்காக இன்னொரு கட்சிக்குப் போகிறவன் – கட்சி மாறுகிறவன் ஆவான் இல்லையா? எதையும், யாரையும் எங்கள் கொள்கை, இலட்சியத்தை வைத்துக் கொண்டுதான் ஆதரித்தோம்; ஆதரிக்கின்றோம். நாங்கள் எங்கள் இயக்கத்தையோ, கொள்கையையோ, இலட்சியத்தையோ விட்டுவிட்டு என்றைக்காவது தடம் மாறிப் போனது உண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1998)
Leave a Comment
