சேலத்தில் தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்குக் கண்டனம்!

2 Min Read

சேலத்தில் தந்தை பெரியார் சிலையில், முகத்தைப் பிளாஸ்டிக் தாளால் மூடி அவமதிக்க முயன்றுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். ‘‘காவிகள், காலிகளின்’’ இந்தச் செயலுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நிலை தொடரக் கூடாது.

தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களை ‘‘மனநிலை குன்றியவர்கள்’’ என்று அடையாளப்படுத்துவதைக் காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. தந்தை பெரியாரை அவதூறு செய்வோரின் மனநிலை அத்தகையது தான் என்றாலும், அதைச் சாக்காகச் சொல்லி சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைத் தப்பவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அமைதிக்கும், சட்டஒழுங்குக்கும் கேடாக இது அமைந்துவிடும். கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை நடந்தது – திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சியில் மீண்டும் தொடங்கிப் பார்க்கிறார்கள். தொடக்கத்திலேயே கெல்லி எறியவேண்டியது அரசின், முதலமைச்சரின் கடமையாகும்.

 

கி.வீரமணி

    தலைவர்,

                                                                                                                                                                                                                                                                                 திராவிடர் கழகம்

16.6.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *