சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் அரசுக் கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

2 Min Read

சென்னை, ஜூன் 15 சென்னையில் அரசு பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில தகுதியான மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:

மொத்த விடுதிகள்: சென்னையில் 12 அரசு கல்லூரி மாணவர் விடுதிகள் மற்றும் 6 மாணவியர் விடுதிகள் என மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (UG), பட்டமேற்படிப்பு (PG), ஐடிஐ (ITI) மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

வருமான வரம்பு: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2,00000-க்குள் இருக்க வேண்டும்.

தொலைவு வரம்பு: மாணவர்களின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து குறைந்தபட்சம் 8 கி.மீ. தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும் (இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது).

விண்ணப்பங்கள்: சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்கள்: விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை இணைக்கத் தேவையில்லை; விடுதியில் சேரும்போது மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தை களுக்கென தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை, ஜூன் 15 பொது சுகாதாரத்துறை மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய்த்தொற்று. பழங்களை உண்ணும் வவ்வால்கள் மற்றும் பன்றிகள், நாய்கள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை சாப்பிடுவது அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாக நோய்த் தொற்று பரவும்.

காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, சுவாசக்கோளாறு, தலைவலி, இருமல், வாந்தி, தசைவலி, தீவிர வயிற்றுப்போக்கு ஆகியவை நோய் அறிகுறிகள் ஆகும். அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்சினைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக 3 நாள் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

கழுவப்படாத பழங்களை சாப்பிடக் கூடாது. நன்றாக கழுவிய பின்னரே பழங்களை சாப்பிட வேண்டும். தோட்டப் பகுதியில் பாதி சாப்பிட்ட நிலையில் உள்ள பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *