வனக்காவலர், வனப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு உடல்திறன் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 13- வனக்காவலர், வனப்பாதுகாவலர், வனப்பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு ஜூன் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் மருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:

ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் இடம் பெற்றுள்ள வனக்காவலர், வனப் பாதுகாவலர் மற்றும் ஒருங்கிணைந்த குரூப்-3 தேர்வில் அடங்கிய வனப் பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான உடல்திறன் தகுதித் தேர்வு ஜூன் 15, 16ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அழைப்பாணையை தேர்வாணை யத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தேதி மற்றும் இடத்தில் நடைபெறும் உடல்திறன் தகுதித் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *