சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் தெரு முனைக் கூட்டம்

1 Min Read

சென்னை, ஜூன் 11- டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாள் தெரு முனைக் கூட்டம் சென்னை மேற்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இராமபுரத்தில் 8.6.2026 அன்று மாவட்டச் செயலாளர் க. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கரு அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்.

தொடக்க உரையை திராவிடர் கழக மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், கழக துணை பொதுசெயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை அருண் உரையாற்றினார்.

நிறைவாக இராமபுரம் ஜனார்த்தனன், நெய்வேலி ஞான சேகரன், முசேகர், அரும்பாக்கம் தாமோதரன், விருகை செல்வம், டெய்லர் கண்ணன், மணி பாரதி மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாமன்ற உறுப்பினர் இராசு மற்றும் கழக தோழர்கள் திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இராமாபுரம் அம்பாள் நகரை சேர்ந்த குப்பன் மற்றும் வசந்த் இருவரும் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்து  கொண்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *