புதுப்பாளையம், ஜூன் 9- கடலூர் மாவட்ட கழக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 5.6.2026 வெள்ளி மாலை கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் இரா.சின்னதுரை வரவேற்புரை ஆற்றினார். தி.முக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் இள.புகழேந்தி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல் நன்றி கூறினார்.
கூட்டத்தில் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் தி.ச.திரு மார்பன், மக்கள் அதிகாரம் மாநிலக் குழு உறுப்பினர் து.பாலு வள்ளலார் தொண்டு மய்ய நிறுவனர் சா.இராசதுரை மாவட்ட தமிழ்ச் சங்கச் செயலாளர் குறிஞ்சி ந.இரவி, தி.மு.க மாநகர துணைச் செயலாளர் அகஸ்டின், கழக பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி, இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் இராமநாதன் மு.மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு, பெரியார் செல்வம், இரு.ராஜேந்திரன், பாவேந்தர் விரும்பி,நூலகர்.க ண்ணன் பா.செந்தில்வேல்,கொ.கிருஷ்ணமூர்த்நி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கவிஞர் ம.ரா.சிங்காரம்,இராஜகுமாரன், வ.இராமலிங்கம், செபஸ்டீன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
