மெட்ரோ ரயிலில் 5 மாதங்களில் 4.71 கோடி முறை மக்கள் பயணம் – அதிகாரிகள் தகவல்!

1 Min Read

சென்னை, ஜூன் 9– மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் என 5 மாதங்கள் வரை மொத்தம் 4.71 கோடி முறை மக்கள் பயணித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

நிகழ் ஆண்டில் கடந்த ஜனவரியில் மெட்ரோ ரயில்களில் 93.28 லட்சம் பயணமும், பிப்ரவரியில் 96.40 லட்சம் பயணமும் இருந்த நிலையில், கடந்த மார்ச்சில் 1.01 கோடி முறை பயணித்துள்ளனர். அந்த மாதத்தில் 13-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிக பயணத்தை மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணித்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் 90.18 லட்சம் முறையும், மே மாதத்தில் 90.14 லட்சம் முறையும் பயணித்துள்ளனர். நிகழ் ஆண்டில் (2026) கடந்த 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 4.17 கோடி முறை மக்கள் மெட்ரோவில் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் சிங்காரச் சென்னை அட்டையில் பயணித்தவர்களே அதிகம். அதன்படி, சிங்காரச் சென்னை அட்டையில் கடந்த ஜனவரியில் 46.52 லட்சம் பேர், பிப்ரவரியில் 49.11 லட்சம், மார்ச் 57.90 லட்சம், ஏப்ரல் 45.18 லட்சம், மே 47.51 லட்சம் என தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *