மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மருத்துவப் பயனாளிகளுக்கு ஆதரவை வழங்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக மூளைக் கட்டி நாள் கடைப் பிடிக்கப்படுகிறது .
புதிய சிகிச்சைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் அவசியத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் வாய்ப்பளிக்கிறது.
உலக மூளைக் கட்டி நாள் ஒரு தீவிரமான மற்றும் பலவீனப்படுத்தும் நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.
நாம் ஒன்றாக இணைந்து, மூளைக் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்
உலக மூளைக் கட்டி நாளின் வரலாறு 2000 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, லீப்ஜிக் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக் கட்டி சங்கம், மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்று முதலில் முன்மொழிந்தது.
ஜெர்மன் மூளைக் கட்டி சங்கத்தின் முன் மொழிவைத் தொடர்ந்து, இந்த நாள் முதலில் 8 ஜூன் 2000 அன்று நியமிக்கப்பட்டது.
“பெரியதாக வாழுங்கள், பெரிதாக நேசியுங்கள். சோகங்களுக்கிடையில் மகிழ்ச்சியைத் தேடுங்கள்”. – லாரன் ரிச்சர்ட்ஸ், பராமரிப்பாளர்
“நான் இந்த உலகத்தை எப்படி அல்லது எப்போது விட்டுச் செல்வேன் என்று எனக்கு ஒருபோதும் உறுதியளிக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் அதை ஒரு நல்ல நாளாக மாற்றுவதற்கு எனக்கு விருப்பம் உள்ளது.” – டீன் ஹாக்கின்ஸ், நோயிலிருந்து மீட்டவர்.
“நல்ல நாட்களிலும், கெட்ட நாட்களிலும் மகிழ்ச்சியாக இருங்கள்; ஒரு சிறந்த நாள் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.” – நிக்கோல் சாங்,
“உங்களுக்கு முக்கியமானதை மதிக்கவும், உங்களிடம் காட்டப்படும் கருணையை மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.” – கிறிஸ்டோபர் லார்கின்ஸ், நோயிலிருந்து மீட்டவர்.
“உங்களுக்கு உதவியதை நினைவில் வைத்து, அதை முன்னோக்கி செலுத்துங்கள்.” – இவானா கெர்ன்.
உலக மூளைக் கட்டி நாளின் முக்கியத்துவம் பன்மடங்கு உள்ளது. மூளைக் கட்டிகள் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் தளமாகவும் இது செயல்படுகிறது. கூடுதலாக, சமூகங்களில் இருந்து நேர்மறையான பங்களிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் மருத்துவப் பயனாளி மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்பை இந்த நாள் வழங்குகிறது.
செயல்பாடுகள்
உலக மூளைக் கட்டி நாளில் பங்கேற்கும் முக்கிய வழிகளில் ஒன்று சாம்பல் நிற ரிப்பன் அணிவது. இந்த எளிய சைகை மூளைக் கட்டிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பயனாளியின் ஆதரவிற்காக பணம் திரட்ட, பேக் விற்பனை, இசை நிகழ்ச்சிகள் அல்லது ‘கேம் ஷோ’க்கள் போன்ற சமூக நிகழ்வுகளை நடத்துவதன் மூலமும் மக்கள் பங்கேற்கலாம்.
கூடுதலாக, தனிநபர்கள் தங்கள் நேரத்தை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தன்னார்வத் தொண்டாக செய்யலாம்.
