திருப்பத்தூர், ஜூன் 4- திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் இல்லத்தில் 01.06.2026 அன்று மாலை 6.00 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டம் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக திருப் பத்தூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பெரியாரின் பெருந்தொண்டர், பெரியார், அண்ணா, கலைஞரோடு பயணித்தவர், மின்சாரதுறை ஓய்வூதிய சங்க தலைவர் எம். ஞானபிரகாசம் அவர்களின் 89ஆவது பிறந்தநாள் மகிழ்வாக மாவட்ட கழக சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட் டது.
இக் காலக்கட்டத்தில் இளை ஞர்களிடையே தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேலும் மிகத் தீவிரமாக இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்கும் விதமாக மாதந்தோறும் இளைஞர்களிடையே கலந்துரையாடல் கூட்டம் நடத்து வது.
விடுதலை நாளிதழுக்கு அதிக அளவில் சந்தாக்களை சேர்ப்பது.
ஆசிரியர் அறிவுறுத்தலுக்கிணங்க கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் ஜூன் 05,09 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் மிகச் சிறப்பாக பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்) எம். என். அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்) பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) சி.எ.சிற்றரசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்ட மகளிரணித் தலைவர்) தி. நவநீதம் (மாவட்ட மகளிரணிச் செயலாளர்) பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.) சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளை தலைவர்) அரவிந்த் (நகர இளைஞரணி செயலாளர்) மற்றம் பல கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
