சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் (Chennai Institute of Journalism) பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணை யாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்துத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
தங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்புகளுக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் என்றும் பக்கபலமாக நின்ற ஆசிரியரின் பேராதரவை மாணவர்கள் இந்தச் சந்திப்பில் நன்றியோடு நினைவு கூர்ந்தனர். நன்றியறிவிப்புடன் கூடிய இச்சந்திப்பில், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் நர்மதா, தொண்டறம், கவுதம், கோபி, சபரி மற்றும் இவாஞ்சலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
