முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சென்னை, ஜூன் 3- முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செந்தமிழ் படைப்பாளி திராவிடப் போராளி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2026) காலை 10.30 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பொறியாளர் ச.இன்பக்கனி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தங்க.தனலட்சுமி, மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும் பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சு.மோகன்ராஜ், பெரியார் மாணாக்கன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, சோழிங்க நல்லூர் மாவட்டத் தலை வர் வேலூர் பாண்டு, பி.சி.ஜெயராமன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, உடுமலை வடிவேல், மகேஷ், க.கலை மணி, அசோக்குமார், பூவை.தமிழ்ச்செல்வன் மற்றும் திரளாக கழகத் தோழர்கள் பங் கேற்று மரியாதை செலுத் தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *