சென்னை,ஜூன் 2- அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 8, 10, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர விரும்புவோர் https://skilltraining.tn.gov.in/detitiadm மூலம் விண்ணப்பிக்கலாம்.
8,10-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
அளிக்கப்படும் பயிற்சிகள்: தையல் தொழில்நுட்பம்,
கோபா, அழகு சாதன வியல், கட்டடப்பட வரைவாளர், சுருக்கெழுத் தர் (தமிழ், ஆங்கிலம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
அரசு சலுகைகள்: பயிற்சியில் சேருவோருக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.750, இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைப டக் கருவிகள், 2 செட் சீருடைகள், மூடு காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இத்துடன் தமிழ்நாடு அரசு வழங்கும் உயர்கல்வி உதவித் தொகையாக மாணவிகளுக்கு கூடுதலாக ரூ.1,000 (6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி யில் பயின்றவர்களுக்கு) வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 8, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல், 5 பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களுடன் நேரில் வந்தும் பயிற்சியில் சேரலாம்.
ஓராண்டு பயிற்சிக ளுக்கு ரூ.235, ஈராண்டு பயிற்சிகளுக்கு ரூ.245 சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்படும். கைப்பேசி: (9444017528, 96296 66279, 97897 59825,95660 58460, 63816 82005, 9840385562 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
