சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (31.5.2026) வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் நாட்டில் மாடுகளை அறுப்பது தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் விழாவுக்கு முந்தைய நாள் வழங்கப்பட்ட தீர்ப்பு பல இஸ்லாமியர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தையும், சமுதாயத்தில் குழப்பம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.

இந்த வழக்கின் போது ஆளும் அரசு தனது தரப்பு வாதத்தை பெயரளவிற்குக்கூட வைத்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீதி பரிபாலன முறையில் ஒரு வாதியாக உள்ள அரசு தனது கடமையை செய்யத் தவறி விட்டதைத்தான் இந்த தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதை தமிழ்நாடு முஸ்லிம்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *