மறைவு

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் துணைச் செயலாளர் ஜீவானந்தம் (வயது 63) சிறிது காலம் உடல் நலமின்றி சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு (31.5.2026) முடிவெய்தினார். தன்னுடைய இளமைக் காலங்களில் முழு நேர திராவிடர் கழகப் பணியாளராக தொண்டாற்றியவர். அந்தப் பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றிலும் பங்கு பெற்று இறுதி வரை கழக கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கீழ் செயலாற்றியவர். இவருக்கு சிவசங்கரி என்ற வாழ்விணையரும், அறிவுச் செல்வன், கிரண்பேடி என இரு பிள்ளைகள் உண்டு. மறைவுச் செய்தி அறிந்த கழகப் பாதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜீவானந்தம் வாழ்விணையருக்கு ஆறுதல் கூறி தலைமைக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள், பிற இயக்கத் தோழர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *