‘‘தலைவர் பெரியார் அவர்கள் தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க ‘விடுதலை’யைத் தொடங்கினார்கள். “விடுதலை’’யின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால் அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல்மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடத்தக்கூடிய ‘விடுதலை’யினை தமிழர்கள் ஒவ்வொரு வரும் வாங்கிப் படிக்கவேண்டும். ‘விடுதலை’ வாங்கிப் படிப்பது தமிழர் கள் ஒவ்வொருவரின் கடமை யாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், ‘ விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.’’
‘விடுதலை’ பணி மனை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
“விடுதலை’’ 2-11-1965.
