சென்னை, மே 29–– அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை
காலியாக உள்ள தொகுதிகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்?
ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது புதியதாக பின்வரும் 4 தொகுதிகள் இணைந்துள்ளன: அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
