தஞ்சை, மே 29- தஞ்சை பெசண்ட் அரங்கில் 23.5.2026 அன்று தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், “பெரியார் 360” எனும் கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.
பல்வேறு தலைப்புகளில் பெரியாரின் சிறப்புகளை கருத்தரங்கில் பதிவு செய்தனர்.
கருத்தரங்கிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். பல்வேறு கோணத்தில் கருத்தாளர்கள் பெரியார் பற்றிய தங்களின் பார்வையைப் பதிவு செய்தனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்ஞரைஞர் அமர்சிங் கலந்துகொண்டார்.
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், இடஒதுக்கீட்டில் முழுமையான சமூகநீதி வழங்கல், பெரியார் – அம்பேத்கர் கொள்கைகளை பரப்புரை செய்தல், ஆறாம் வகுப்பு முதல் பாடத் திட்டத்தில் சமூகநீதி வரலாற்றை முழுமையாக இடம் பெறச் செய்தல், புரட்சிச் சிந்தனையை அறிந்திட “பெரியார் எனும் உரைகல்லே” உரிய கருவியாகக் கொள்ள வேண்டும் முதலான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தங்க.குமரவேல் நன்றி கூறினார்.
