புதுடில்லி, மே 14 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, மேனாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமித் துள்ளார்.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக – தேர்தல் ஆணையத் தின் திருட்டு சந்தையில் திருட்டு எவ்வளவு பெரியதோ, பரிசும் அவ்வளவு பெரியது” என்று கூறி யுள்ளார். இந்த நியமனத்தைத் தற் போது எதிர்க்கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸும் கடுமை யாக விமர்சித்துள்ளது.
இக்கட்சியின் சாகேத் கோகலே வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “தேர்தல் ஆணையத்துக்காக மேற்கு வங்கத் தேர்தலை நடத்திய மனோஜ் அகர்வால், புதிய பாஜக அரசால் தலைமைச் செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவும் தேர்தல் ஆணையமும் தேர் தலைத் திருடியதை இப்போது வெளிப்படையாக ஒப்புக்கொள் கின்றன. இவை நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரியவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
