ஒரு வாக்கின் வலிமை என்ன என்பதை குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் திருப்பத்தூர் தேர்தலைச் சுட்டிக்காட்டிய ஆனந்த் மஹிந்திரா

மும்பை, மே 7- ஒரு ஓட்டின் வலிமை என்ன என்பதை திருப்பத்தூர் தேர்தல் முடிவு மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் வாக்கின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்கு எண்ணப்பட்ட போது, திமுக-தவெக இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. பல சுற்றுகளில் இரு கட்சிகளும் மாறி,மாறி முன்னிலை வகித்தது.

இறுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 83,375 வாக்கு பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்கு வாங்கி இருந்தார்.

இந் நிலையில் ஒரு வாக்கு வரலாற்றை மாற்றிவிட்டது என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார். திருப்புத்தூர் தொகுதி தேர்தல் முடிவை தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். அதோடு, தேர்தல் ஆணையர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள திருப்புத்தூர் தொகுதி முடிவுகளையும் பதிவில் இணைத்துள்ளார்.

அண்மையில் வெளியான மாநில தேர்தல் முடிவுகள் (தமிழ்நாட்டை குறிப்பிடுகிறார்) வியக்கத்தக்க வகையில் இருக்கின்றன. என்னை பொறுத்தவரை இந்த ஒளிப்படம் ( திருப்புத்தூர் தேர்தல் முடிவை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையர் போட்டோ) தேர்தல்களில் மிகவும் மறக்க முடியாத ஒளிப்படமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் திருப்புத்தூர் தொகுதியியில் முன்னிலையில் இருந்து இரு வேட்பாளர்களுக்கு இடையே 1,66,000 வாக்குக்கு மேல் பதிவானது. ஆனால் ஒரேயொரு ஒரு வாக்கினால் சரித்திரம் மாறியது. இந்த போட்டோ நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும், உலகம் முழுவதிலும் காட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் தாம் வளரும் போது தங்களிடம் மிக பெரிய வலிமை இருப்பதை புரிந்து கொள்வார்கள். ஒரு வாக்குக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு தமது பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஒரு ஓட்டின் வலிமை என்ன என்பதை திருப்பத்தூர் தேர்தல் முடிவு மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் வாக்கின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்கு எண்ணப்பட்ட போது, திமுக-தவெக இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. பல சுற்றுகளில் இரு கட்சிகளும் மாறி,மாறி முன்னிலை வகித்தது.

இறுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 83,375 வாக்கு பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்கு வாங்கி இருந்தார்.

இந் நிலையில் ஒரு வாக்கு வரலாற்றை மாற்றிவிட்டது என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறி உள்ளார். திருப்புத்தூர் தொகுதி தேர்தல் முடிவை தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். அதோடு, தேர்தல் ஆணையர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ள திருப்புத்தூர் தொகுதி முடிவுகளையும் பதிவில் இணைத்துள்ளார்.

அண்மையில் வெளியான மாநில தேர்தல் முடிவுகள் (தமிழ்நாட்டை குறிப்பிடுகிறார்) வியக்கத்தக்க வகையில் இருக்கின்றன. என்னை பொறுத்தவரை இந்த ஒளிப்படம் ( திருப்புத்தூர் தேர்தல் முடிவை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையர் போட்டோ) தேர்தல்களில் மிகவும் மறக்க முடியாத ஒளிப்படமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் திருப்புத்தூர் தொகுதியியில் முன்னிலையில் இருந்து இரு வேட்பாளர்களுக்கு இடையே 1,66,000 வாக்குக்கு மேல் பதிவானது. ஆனால் ஒரேயொரு ஒரு வாக்கினால் சரித்திரம் மாறியது. இந்த போட்டோ நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும், உலகம் முழுவதிலும் காட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் தாம் வளரும் போது தங்களிடம் மிக பெரிய வலிமை இருப்பதை புரிந்து கொள்வார்கள். ஒரு வாக்குக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு தமது பதிவில் அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *