‘பஞ்ச்’சோந்தியா – பஞ்ச வாந்தியா?

‘இந்து தமிழ்திசை’ நாள்தோறும் மேற்கண்ட தலைப்பில், ‘கேளிக்கை’ என்ற பெயரில் எதையோ கிறுக்குகிறது.

அளவுக்கு அதிகமாகிறது அதன் போக்கு!

இன்று இதோ!

செய்தி: 75 சதவிகித பெண்கள் வாக்குகள் தி.மு.க.வுக்குக் கிடைக்கும்.

– அமைச்சர் ரகுபதி

பஞ்ச்: 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கெடுத்த பிறகா?

பதிலடி: ஏதோ  ஒரு வகையில் நஞ்சைக் கக்குவதா?

33 சதவிகித பெண்கள் இட ஒதுக்கீட்டை கெடுத்தது யார்?

2023 ஆம் ஆண்டே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 2024 தேர்தலில் செயல்படுத்தியிருக்க வேண்டியதுதானே!

தொகுதி மறுவரையறை மசோதாவுடன் அதனை ஏன் இணைக்கவேண்டும்?

இதெல்லாம் தெரியாதா ‘இந்து தமிழ் திசை’க்கு?

தெரியும்தான் – என்றாலும், ‘இந்து’வாயிற்றே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *