காங்கிரஸ்
விளக்கம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
புதுடில்லி, ஏப்.20 மக்களவையில் தோற் கடிக்கப்பட்டது தொகுதி வரையறை தொடர்பான மசோதாவே தவிர, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல என்று காங்கிரஸ் கட்சி விளக் கம் அளித்துள்ளது. மேலும், தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையிலேயே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உட னடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் சுப்ரியா சிறீநேத்தே நேற்று (19.4.2026) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
“மகளிர் இட ஒதுக் கீடு மசோதா தோற்கடிக்கப் படவில்லை. நீங்கள் (ஒன்றிய அரசு) நாட்டின் மீது திணிக்க விரும்பிய அந்தத் தொகுதி வரை யறை மசோதாதான் தோற்கடிக்கப்பட்டது. பெண்களுக்கான உரிமையை வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை அரசு ஏற்படுத்தக் கூடாது.”
உடனடி அமலாக்கம்: மக்கள் தொகை கணக் கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைக்காகக் காத்திருக்காமல், தற்போ தைய மக்களவை உறுப்பினர்களின் எண் ணிக்கையை அடிப்படை யாகக் கொண்டு இட ஒதுக் கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டும். அரசின் மீது விமர்சனம்: இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இரட்டை நிலையை கடைப்பிடிக்கிறது.
பெண்களுக்கான அதிகாரப் பகிர்வில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதைச் செயல்படுத்தும் முறை யிலேயே தங்களுக்கு உடன்பாடு இல்லை.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

