புதுடில்லி, ஏப். 16- நாட்டில் வேலை யின்மை, கடந்த மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட் டுள்ள தரவுகளில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது, முந் தைய பிப்ரவரி மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது.
நகர்ப்புற வேலை யின்மை விகிதம் அதிக ரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது, பிப்ர வரியில் 6.60 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் சில் 6.80 சதவீதமாக அதி கரித்துள்ளது.நகர்ப்புற ஆண்களிடையே வேலை யின்மை 6.10 சதவீதமாக வும்; பெண்களிடையே 9 சதவீதமாகவும் இருந்தது.
கிராமப்புற பெண்களி டையே வேலையின்மை மார்ச் மாதத்தில் பெரிய மாற்றமின்றி நிலையாக காணப்பட்டது. அதே நேரத்தில், கிராமப்புற ஆண்களுக்கான வேலை யின்மை விகிதம் பிப்ர வரி மாதத்தை விட சற்றே அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 35,30 சதவீதத்தில் இருந்து 34.40 சதவீதமாக குறைந்துள்ளது.
