தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிமுறை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா, ஆக.27 மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழி முறை.   காந்தியார் மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது,” என்று குற்றஞ்சாட்டினார். பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி தொடங்கிய வாக்குரிமை பயணம், ஓர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. பீகாரில் உள்ள அராரியா நகரில் ஓர் உணவகத்தில் மகா கூட்டணித் தலைவர்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தும் காணொலியை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தீபாங்கர் பட்டாச்சார்யா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, மகாத்மா காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மற்றும் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துகிறது. அந்த அமைப்பு மகாத்மா காந்தி மீதும் தொடர்ந்து தனிநபர் விமர்சனத் தாக்குதல்களை நடத்தியது.  காந்தியார் குறித்து ஆர்.எஸ்.எஸ். எந்த அளவுக்கு அவதூறு பரப்பியது என்பதை மக்கள் நினைவில் கொள்ளவில்லை.  காந்தியார் பற்றி ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து பொய்களைப் பரப்பி வந்தது,” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *