கரோனா தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார்

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 25 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். தொற்று பாதிப்புக்கு தடுப்பூசிகளுக்காக வல்லரசு நாடுகள் தவிர பிறநாடு கள் கையேந்தும் சூழல் ஏற்பட்டது.
அப்போது உள்நாட்டிலேயே கோவேக்சின், கோவிஷீல்டு என இரு தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் போடப்பட்டது. மேலும் பிற நாடுகளுக்கும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தநிலையில் உலகம் முழுவதும் தற்போது புதிய ரக உருமாறிய கரோனா தொற்று பரவுகிறது.
இந்தியாவில் கேரளா, ஒடிசா, கருநாடகாவில் கரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி கள் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுசித்ரா பல்லா கூறுகையில், “புதிய ரக கரோனா பரவல் குறித்து கவனித்து வருகிறோம். அரசு கேட்டுக் கொண்டாலும், நாட்டு மக்களுக்கு தேவைப்பட்டால் தடுப்பூசிகளை மீண்டும் தயாரிக்க ஆவலாக உள்ளோம்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *