தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் ஆணை ரத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

பெரும்பாவூர், மே.20- கேரளாவில் கடந்த ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை நியம னம் செய்ய மாநில அரசு தேர்வு பட்டியலை ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கானுக்கு அனுப்பியது. அந்த பட்டியலை அவர் தவிர்த்து, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சிவப்பிரசாத், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் சிசா தாமஸ் ஆகிய 2 பேரையும் தற்காலிக துணைவேந்தர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இவ்வாறு துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாநில அரசு கேரள உயர்நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில், மாநில அரசு பரிந்துரைத்த தேர்வு பட்டியலை தவிர்த்து, பல்கலைக்கழகங்களுக்கு தற்காலி கமாக துணைவேந்தர்கள் ஆளுநர் நியமித்து உள்ளார். இதனால் ஆளுநர் பல்கலைக்கழக சட்டங்களுக்கு புறம்பாக செயல் பட்டு உள்ளார். எனவே, ஆளுநரின் துணைவேந்தர்கள் நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுரேஷ் குமார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக மாக துணைவேந்தர்களை நியமிக் கும்போது, மாநில அரசு வழங்கும் தேர்வு பட்டியலில் இருந்து மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். 2 துணை வேந்தர்களின் நியமனம் பொறுப்பு இன்று (20.5.2025) உடன் முடிவடைவதால், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் தலையிட வில்லை. மேலும் கேரள தொழில் நுட்ப பல்கலைக்கழகம், டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *