மாநில உரிமைகளை பறிக்கும் தொகுதி மறு சீரமைப்பு!

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவில் எச்சரிக்கை!

சென்னை, ஏப். 1 – நியாயமற்ற முறையில் தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வரப்படுகிறது என்றும், மாநில உரிமைகளை பறிக்கும் அபாயம் உண்மையானது. அது மிக அருகாமையில் வந்து விட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:– மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பின் அபாயம் குறித்து அவுட்லுக் இந்தியா இதழில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எழுதியுள்ள செய்திக்கட்டுரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நியாயமற்ற முறையில் தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்படுகிறது, அது முன்னெ ப்போதும் இல்லாத வகையில் மக்கள்தொகையை அரசியல் ரீதியான ஆயுதமயமாக்குவதாக உள்ளது என்று முதலமைச்சர் குற்றம்சாட்டி யுள்ளார்.

இந்தியா இப்போது ஒரு குறுக்கு வழியில் நிற்கிறது. இப்போது நம் மூதாதையர் விரும்பிய கூட்டாட்சி தத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டுமா அல்லது கலாச்சார ரீதியான ஒற்றை ஆட்சியை மறைக்கும் ஒரு வெற்று பெரும்பான்மைவாதத்திற்கு சரணடைவதா என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டிய சூழலில் நிற்கிறோம் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநில உரிமைகளை பறிக்கும் அபாயம் உண்மையானது மிக அருகாமையில் வந்து விட்டது என எச்சரித்துள்ள முதலமைச்சர், நமக்காகப் பேசுவதன் மூலம் நாம் அனைவருக்காகவும் பேசுகிறோம் என தெரிவித்துள்ளார். அரசமைப்புச்சட்டம் , கூட்டாட்சி தத்துவம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும் மக்கள் தொகை அடிப்படை யிலான தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்தாக வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதில் அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *