‘விடுதலை’ சந்தா
சோழிங்கநல்லூர் மாவட்ட துணைத் தலைவர் வேலூர் பாண்டுவின் மகன் வழக்குரைஞர் வி.பி.அறிவன் தம் 24ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு 'விடுதலை' சந்தா ரூ.2000 வழங்கினார். (15.07.2023, பெரியார் திடல்).
‘விடுதலை’ சந்தா
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார். உடன் தலைமைக் கழக அமைப் பாளர் வி.பன்னீர்செல்வம் (15.07.2023, பெரியார் திடல்).
பெரியார் விடுக்கும் வினா! (1037)
கல்வி இலாகா என்பது ஆசிரியர்களைப் பற்றிய கவலைகொண்டுள்ளதே அல்லாமல், பிள்ளைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதா? ஏன்? கல்வி அதி காரிகள் எல்லாம் ஆசிரியர்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகிறவர்களே ஆவர். வக்கீல்களில் இருந்து ஜட்ஜுகளைப் பொறுக்கி எடுத்தால் நீதியின் ஒழுக்கம் எப்படி இருக்கும்?…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.👉ரபேல் ஒப்பந்தத்திற்கு பலனாக மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் பாஸ்டைல் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என ராகுல் சாடல்.👉டெல்லி அரசுக்கு கட்டுப்பாடு…
வருந்துகிறோம்
மதுரை வடக்கு மாசி வீதி பகுதி யைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் இன்று (16.7.2023) அதிகாலை ஒரு மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.தொடர்புக்கு: மகன் செ.செல்வ ராஜ், 8678966467
கடலூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள்
மாநகரத் தலைவர் : தென்.சிவக்குமார்மாநகர செயலாளர் : இரா.சின்னத்துரைகடலூர் மாநகராட்சி 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.1, கடலூர் செம்மண்டலம் பகுதி திராவிடர் கழகம் (9 வார்டுகள்) - வார்டு 1 முதல் 9வரை.பகுதி கழகத்தலைவர்: கொ.கிருஷ்ணமூர்த்திபகுதி கழக செயலாளர்: வேணுகோபால்2,…
கடலூர் மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு 45 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு
கடலூர், ஜூலை 16 - கடலூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.07.2023 அன்று நண்பகல் 12 மணியளவில் கடலூர் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை கட்டடத்தில் நடைபெற்றதுகடலூர் மாநகர செய லாளர் இரா. சின்னதுரை அனைவரையும் வர வேற்று…
காமராஜரும் – பெரியாரும் கருத்தரங்கம்
சென்னை, ஜூலை 16 - பகுத்தறிவாளர் கழக மாதாந்திரக் கூட்டம் 8.7.2023 - சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு, அன்னை மணியம்மையார் அரங்கில் நடந்தது. சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜீ வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மிகவும் சிறப்பாக நடத்த புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
புதுச்சேரி, ஜூலை 16 - புதுச்சேரி மாவட் டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் 11.-7.-2023 அன்று மாலை நடை பெற் றது. மாவட்டத் தலைவர் வே.அன் பரசன் தலைமையில், காப்பாளர் இரா.சடகோபன் முன்னிலையில்,…
இந்தியாவில் 30 சதவீத மருந்து தேவைகளை தென் மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன
சென்னை, ஜூலை 16 - ''இந்தியாவின் 30 சதவீத மருந்து தேவைகளை தென் மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன'' என, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்க தென்மாநில பிரிவு தலைவர் ஜெயசீலன் கூறினார்.சென்னை வர்த்தக மய்யத்தில், அய்.டி.எம்.ஏ., என்ற இந்திய மருந்து உற்பத்தியாளர்கள்…
