‘விடுதலை’ சந்தா
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் ஆலந்தூர் செ.இராமச்சந்திரன் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் (24.6.2023) மகிழ்வாக அவரது மகன் இரா.இலட்சுமிபதி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉தெலங்கானா மாநில 10-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் அரசமைப்புச் சட்ட முகப்புரை பகுதியில், சமத்துவம், மதச்சார்பின்மை வார்த்தைகள் நீக்கப்பட்டிருப் பது சர்ச்சை.👉 காங்கிரஸ் கட்சி அனைவரையும் அரவணைத்து சென்றால் தான், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு சாத்தியம் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான்…
பெரியார் விடுக்கும் வினா! (1014)
பட்டினியால் மக்கள் வாடும்போது வேளைக்கு 8 படி அரிசிச் சாப்பாடு கேட்பது கடவுளாக இருக்க முடியுமா? பட்டாடை கேட்பதும், தங்கக் குல்லா, வைரக் குல்லாக் கேட்பதும் கடவுளாக இருக்க முடியுமா? வருடத்திற்கொரு கல்யாணமும், போதாக் குறைக்குத் தேவதாசிகளும் கேட்கும் கடவுளும் யோக்கியமான…
வள்ளலார் சனாதனவாதியா? வர்ணாஸ்ரமத்திற்கு வெடிவைத்த வள்ளலார்!
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!" என்றவர் வள்ளலார்"பசி தீர்த்த வள்ளலார்!"இப்படித்தான் வள்ளலார் நமக்கு சொல்லிக்கொடுக்கப் பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823ம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே…
கல்லக்குறிச்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கல்லக்குறிச்சி, ஜூன் 23 - 27.05.2023 அன்று மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகத்தில் கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் பெ.எழிலரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர்…
பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் உயர்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 23 - நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப் பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப பதிவு மே 5…
பதிவு ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட்டம் பதிவுத் துறை உத்தரவு
சென்னை, ஜூன் 23- தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட சொத்து உள்ளிட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட் டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத் துறை தலைவர் உத்தர விட்டுள்ளார்.இது குறித்த கடிதத்தை, அனைத்து சார்…
செம்மொழி பூங்கா – உலகத் தரத்திற்கு மாற்றம் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 23 - சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவர வியல் பூங்கா, துபையில் உள்ள மிராகில் பூங்கா போன்று உல கத் தரத்துக்கு மேம்படுத்தவுள்ளதாக சென்னை உயர்நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.சென்னை அண்ணா…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் துறைக்கான உலகளாவிய பணி வாய்ப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, ஜூன் 23- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் ஈஸி லிங்க்(Eazy Link Academy) நிறுவனத்தின் சார்பில் 19.06.2023 அன்று மாலை 4 மணி யளவில் மருந்தியல் துறைக்கான உலகளாவிய பணிவாய்ப்பு குறித்த சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக் கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன் னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர வேளாளர்…
புதுச்சேரி முதலமைச்சருக்கும் திராவிடர் கழக தலைவருக்கும் நன்றி !
புதுச்சேரியில் ஆண்டுதோறும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அகில இந்திய நர்சிங் கவுன்சில் புதிய விதி முறைப்படி நுழைவுத் தேர்வு நடத்தி தான் மாணவர் களை…
