கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

5.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்; காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் தீர்மானம்.
* ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. நடைமுறை முற்றிலும் பிழையானது; எந்த சட்டத்திருத்தம் இல்லாமலே சரி செய்திட வழி இருக்கிறது என்கிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராசன்.
*தனியார்மயத்தால் தரமான கல்வியை தர முடியாது: அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும், சென்னை அய்அய்டி மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் மாநிலத்தை தீக்கிரையாக்கியது பாஜக எனும் தீக்குச்சி; எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதிலேயே பாஜக ஆர்வமாக இருக்கிறது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறீநாராயண குரு ஸநாதன தர்மத்தை ஆதரிப்பவர் அல்ல, ‘நாம் ஜாதி வேற்றுமைகளை கைவிட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.’ நாராயண குருவை பிரிவினைக்கு சமன் செய்து அவருடைய பாரம் பரியத்தை இழிவுபடுத்துவது அவதூறாக இருக்கும் என பினராயி விஜயன் பேச்சு.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *