தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை, டிச.24- தமிழ்நாட்டில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சான்றிதழ்கள்

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில், தேசிய மருந்தாளுநா் மாநாடு நேற்று (23.12.2024) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநாட்டு அறிவியல் மலரை வெளியிட்டு, சிறந்த மருந்தாளு நா்கள், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுனா்கள் மற்றும் மருந்தியல் மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களும் வழங்கினார்.

மாநாட்டில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:
இந்திய மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகத்துக்கு எடுத்துகாட்டாக மருந்து துறையில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா கூட 40 சதவீத ஜெனரிக் மருந்துகளை இந்தியாவிடம் வாங்குகிறது. அய்ரோப்பிய நாடுகளில் இந்திய மருந்துகள் 30 சதவீதம் உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டின் மருத்துவ திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன.

மாணவா்களின் மனப்போக்கு…

தமிழ்நாட்டில் அரசு மருந்தாளுநா் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கல்லூரிகளில் படித்த எனக்கு அரசுதான் வேலை தர வேண்டும் என மனப்போக்கு மாணவா்களிடையே உள்ளது. அது தவறில்லை. ஏராளமான தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளன. அவற்றை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும்.

மருத்துவ மாணவா்களின் தகுதி, திறமையை கொண்டு படிப்பை முடித்த பின் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அண்மையில் 946 மருந்தாளுநா் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

இதுவரை இல்லாத வகையில் அனைவருக்கும் கலந்தாய்வு நடத்தி அவரவா் விரும்பும் இடங்களுக்கே பணி ஆணைகள் தரப்பட்டது இதுவே முதல்முறை.

1000 இடங்களில் மருந்தகங்கள்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 24 ஆயிரம் மருத்துவம் சார்ந்த பணிநியமனங்கள் முறையாக நடைபெற்றுள்ளன. கலந்தாய்வு மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடமாறுதல்கள் வழங்கப்பட் டுள்ளன. ஜன.5-ஆம் தேதி 2,553 மருத்துவா் காலிப்பணியிடங்களுக்கு இணையம் மூலம் தோ்வு நடைபெற வுள்ளது.

சுதந்திர நாளன்று மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் தொடங்கப்படும் என்று முதலமைச்சா் அறிவித்திருந்தார். மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 மூலப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் ஒருங்கிணைந்து 1,000 மக்கள் மருந்தகங்களை விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, பதிவாளா் கே.சிவசங்கீதா, இந்திய மருந்தியல் கழகத்தின் தலைவா் எஸ்.மணிவண்ணன், துணை தலைவா் ஜெ.ஜெயசீலன், மருந்தியியல் கல்லூரியின் முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *