கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை

1 Min Read

கன்னியாகுமரி, டிச. 20- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து பரப்புரையைத் தொடங்கிவைத்தார். கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் மா.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் செயலர் எஸ். அலெக்சாண்டர், திமுக தொழிற்சங்க நிர்வாகி க.வ. இளங்கோ, மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை குமரி செல்வன், முத்துவைரவன்,ம.செல்வராசு,கு.சந்திரன், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்று மூடநம்பிக்கையை முற்றாக ஒழிக்கும் துண்டறிக்கைகள், நூல்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பொதுமக்கள் ஆர்வமுடன் படித்து அறிவுத்தெளிவு பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *